Tuesday 14 April 2015

எறும்பினை கொல்வது எப்படி?

எறும்பினை கொல்வது எப்படி?



முதலில் சர்க்கரையுடன் மிளகாய் பொடியை நன்றாக கலந்து, அதை எறும்பு புற்றின் அருகே வைக்கவும்.

காரமான சர்க்கரையை சாப்பிட்டதால் நீர் அருந்த தண்ணீர் தொட்டியை தேடி எறும்பு வரும். அப்போது தெரியாமல் பின்னால் இருந்து தொட்டிக்குள் தள்ளி விடவும்.



தண்ணீரில் மூச்சு திணறினாலும் சமாளித்து மேலே வரலாம்.

அப்படி தப்பித்து வந்தால், உடல் நனைந்ததால், ஈரத்தை காய வைக்க அது நெருப்பை தேடி வரும்.

அந்த நேரம் நெருப்பில் வெடிகுண்டை போடவும்.

அந்த வெடிகுண்டு வெடித்ததில் எறும்புக்கு பலத்த காயம் ஏற்படலாம்.

அப்போது அதை மருத்துவமனையில் சேர்க்கவும்.

தீவிர சிகிக்சை பிரிவில் கண்காணிக்கவும்.

ஒளிந்து நின்று யாருக்கும் தெரியாமல் எறும்புக்கு வைத்து இருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து விடவும்.

இப்போது மூச்சு காற்றுக்கு திணறும் எறும்பு தானாகவே சாகலாம்.

அப்படி சாகாவிடில், தலையணையை எடுத்து அதன் மேல் வைத்து அழுத்தினால் நிச்சயம் சாக வாய்ப்புண்டு.

(படித்து விட்டு கழுவி ஊத்தக்கூடாது அப்படி செய்தால் நாளை
"பாக்டீரியாவை" கொல்வது எப்படினு போடுவேன்...!!!)

No comments:

Post a Comment